Literatur -
கவிதைகள்
|
Written by N Suresh
|
Wednesday, 21 December 2011 08:24 |
இன்று வரை யாரையும் அவ்வளவு நேசித்ததே இல்லையே என்னுயிர் என்னுயிர் அப்பா உன்னை விட ! எந்தனுள்ளம் ஆறுதலைத் தேடுகிறது கண்ணீருடன் இன்னமும் அனாதை நிலையிலிருந்து மீள இயலமால் ! வருடங்கள் பதினாறு காலமாக அப்பா உன் மரணம் கொண்டு சென்றது உன் உயிர் மட்டுமா என்னுயிர் நட்பும் தானே ! கனக்கிறதே இதயமின்றும் !
மனம் திறந்து பேச பொறுமையாக யோசனை சொல்ல சிரிக்க பயணிக்க ஒன்றாய உணவருந்த சிநேகிக்க எந்தன் மகிழ்ச்சியின் சங்கீதத்திற்கு இசையமைக்க அன்பின் வடிவமே என் அப்பா நீ விண்ணகத்தில் இருந்து எனக்காக பிரார்த்தனை செய்கிறாயோ ? அல்லது உந்தன் ஆத்மா எங்கோ பயணித்து நேற்று எந்தன் மகளின் உயிரில் மீண்டும் மறுபிறப்பு எடுத்தாயோ ? ஆர்வமுடன் மருமகனிடம் பேரனின் பெயர் கேட்டேன் மகிழ்ச்சியில் வியந்தேன் அப்பா ! உந்தன் இனிய பெயர் தான் என் பேரனுக்கும் ! - N Suresh Chennai
|
Last Updated on Wednesday, 21 December 2011 08:37 |