Literatur -
புத்தகங்கள்
|
Written by ரவி (சுவிஸ்)
|
Friday, 07 August 2009 04:46 |

நளாயினியின் “நங்கூரம்” கவிதைத் தொகுப்பு ஓர் அறிமுகம்!
“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”
அந்த வீதியில் நீயும் நானும் நட்பாய்த் தெரிந்த முகம் ஒன்று |
Last Updated on Tuesday, 21 October 2014 22:10 |
Read more...
|
|
Literatur -
புத்தகங்கள்
|
Written by அ. மங்கை
|
Friday, 07 August 2009 05:10 |
ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்
ஈரக் கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணில் இருந்து கசிவுகளை உடலிலும் மனத்திலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் இது. 1986 இல் வெளியான "சொல்லாதசேதிகள்" என்னும் கவிதைத்தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு பயணதில் இருபது ஆண்டுகளுக்குப்பின் 92 ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இணையம் தவிர்த்து அச்சில் வெளியான ஆக்கங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தொகுப்பினை செய்தவர் அ.மங்கை அவர்கள், சென்னயில் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார், ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடன் உயர்வான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடனான தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர், உணர்வுபூர்வமாக ஒன்றித்து செயலாற்றுபவர். |
Last Updated on Tuesday, 11 March 2014 20:16 |
Read more...
|
Literatur -
புத்தகங்கள்
|
Written by த.சிவசுப்பிரமணியம்
|
Friday, 07 August 2009 05:44 |
`அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற இளங்கீரனது நாவல் வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங் காட்டும் ஒரு காலத்திற்குரியது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்துண்ணும் தேவையுள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக் கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ காலனித்துவச் சூழலிலும் இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையில் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடன் வரையப் பட்டது. ஈழத்தின் நாவல், இலக்கிய வரலாற்றில் முதன்மை நிலையில் வைத்துக் கணிக்கப் படுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் இளங்கீரன் மதிக்கப் படுகின்றார். இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டு நூலுருப் பெற்றுள்ளது. கடந்த தசாப்தங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும், உறவையும் இந் நாவலூடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.
- த.சிவசுப்பிரமணியம் |
Last Updated on Tuesday, 11 March 2014 19:53 |
Read more...
|
|
Literatur -
புத்தகங்கள்
|
Written by சந்திரவதனா
|
Friday, 07 August 2009 04:55 |
செட்டை கழற்றிய நாங்கள் கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை
95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.
செட்டை கழற்றிய நாங்கள், கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல, ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.
சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு. |
Last Updated on Tuesday, 21 October 2014 22:11 |
Read more...
|
Literatur -
புத்தகங்கள்
|
Written by சந்திரவதனா
|
Wednesday, 01 July 2009 09:40 |
பல போர்க்காலக் கவிதைகளையும், மாவீரர் சம்பந்தமான கவிதைகளையும் கொண்டு, 92 கவிதைகளுடன், சுவடி பதிப்பகத்தாரின் தயாரிப்பில், மனஓசை` வெளியீடாக வெளிவந்திருக்கிறது ´தீட்சண்யம்` கவிதைத் தொகுப்பு. THEEDCHANYAM (Poems) Author: S.T.Premarajan (Theedchanyan) (Thiyagarajah Premarajan)
First Edition: May 2009 © by Manaosai Verlag © Chandravathanaa Selvakumaran Email: chandra1200@gmail.com Compilation: Chandravathanaa Selvakumaran Illustrations & Cover design: Muunaa Production: Chuvadi, Chennai - 600 005, India Printed by: Chennai Micro Print (P) Ltd, Chennai – 29
ISBN- 978-3-9813002-1-5 |
Last Updated on Tuesday, 11 March 2014 20:16 |
Read more...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
Page 10 of 11 |