manaosai

அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து


அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து
எழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். read more

எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்

Thumilan Selvakumaran
எடுத்தாளும் எழுத்தாளன் உளி
துமிலனுடன் ஒரு நேர்காணல்

துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more

அவன் ஆம்பிளை! நான் பொம்பிளை!

“உனக்குத் தெரியுமோ குதிரைச்சவாரி சரியான இதமானது. இன்பமானது. அந்தப் பொழுதுகளில் நான் இனியில்லை எண்ட அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பன்“ மிருகங்களைத் தூர இருந்து இரசிப்பதில் மட்டுமே விருப்பமுடைய எனக்கு அன்ரோனெலாவின் பேச்சு ஆச்சரியத்தையே தந்தது. அவள் கண்களை மூடிச் சுகித்த படி தொடர்ந்தாள் “குதிரைக்குக் குளிக்க வார்க்கிற பொழுது ஒரு வாசம் வருமே! அது மிக மிகச் சுகமானது“  மிருகங்களைத் தொடுவதோ, தடவுவதோ என்னால் முடியாத காரியம். எனக்கு அது அருவருப்பான ஒரு விடயமும் கூட. இவளுக்கு குதிரை குளிக்கிற பொழுது வருகிற வாசம் பிடிக்குதாம்.  “நான் குதிரையைச் சுத்தம் செய்து முடிஞ்சதும், அது தன்ரை பின்னங்கால்களை மடிச்சு, மண்டியிட்டு நன்றி சொல்லுமே, அப்ப எனக்கு உச்சி குளிரும்“ “உண்மையாகத்தான் சொல்லுறியோ?“ நம்ப முடியாது கேட்டேன். “ஓம் உண்மை“ “ஒவ்வொருமுறையும் நீ சுத்தம் செய்த பிறகு அது மண்டியிடுமோ?  “ஓம் மண்டியிடும். அது ஒரு ஆனந்தமான பொழுது.“  எனக்கு அது ஆச்சரியமான பொழுது. மனசுக்குள் அவளை விசித்திரமாக உணர்ந்தேன். அன்ரோனெலா இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் வேலை செய்யும் வங்கியின் மேலதிகாரி ஒருவரின் காரியதரிசி. யேர்மனிய மொழியை மிகச் சரளமாகப் பேசக் கூடியவள். அவளது முகத்தைப் பார்க்காமல் தொலைபேசியில் பேசும் எவரும் அவளை இத்தாலி நாட்டவள் என்று கண்டு பிடிக்க மாட்டார்கள். அத்தனை நேர்த்தியாக யேர்மனிய மொழியை உச்சரிப்பாள். நேரே பார்த்தால் மட்டும் ஏதோ ஒன்று அவள் யேர்மனியைச் சேர்ந்தவள் அல்ல என்று காட்டிக் கொடுத்து விடும். அழகானவள். ஆனால் குள்ளமானவள்.  Read more 

படைப்புகளிற்கான அன்பளிப்பு

ff

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்


தலைவருடன் சில மணிப் பொழுதுகள்
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! read more

கப்டன் மயூரன்


கப்டன் மயூரன்
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். read more

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன். முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார். கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை. கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது. கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது. „கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா?“ என்று சூசையிடம் கேட்டேன். கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது. „அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார். „சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள். „சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.
எங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ? Read More

நம்பிக்கை இன்னும் சாகவில்லை..!

வழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக் கிடந்தது. தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது. கார்த்திகை 27. இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம். அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது. சந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது. சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவான் எண்டு நம்ப இல்லை. எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது. "என்னப்பா யோசிச்சு கொண்டு இருக்கிறியள்?அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.. இனிமேல் எண்டாலும் உங்கட எதிர்காலத்தை நினைச்சு நடவுங்கோ.. "சந்திரனின் மனைவி இதை சொல்லும் போது அவளது கண்களில் ஏதோ வெறுமை தெரிந்தது.  "இல்லடி, இண்டைக்கு ஏதோ மனம் ஒருமாதிரி இருக்கு. மனசு வலிக்குது. நான் ஒருக்கா கடற்கரைப்பக்கம் போட்டு வாறன்." என்று சொன்ன சந்திரன் மனிசியின் பதிலுக்கு காத்திராமல் "டேய் சிலம்பரசன், அப்பான்ர சேட்டை ஒருக்கா எடுத்து வா" என்றான். Read more

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்


மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில்... read more

கப்டன் மொறிஸ்


கப்டன் மொறிஸ்
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்! மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன்! ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே" என்றான். அவன்தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன்... read more

அவளுக்கு ஒரு கடிதம்

நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை. ‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம், வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள். இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.  ‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான் விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம் பார்க்கின்றார். அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’  ‘ஹ_ ம்… செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டோம். படித்து நல்ல உத்தியோகமும் தேடிக்கொண்டுவிட்டாய். அங்கேயே ஒருத்தனை பிடித்தும்விட்டாய். நாங்கள் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போகின்றாய்? சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உன் இஷ்டம்!" அதற்குமேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்பது போல ஜானகி நகர்ந்து விட்டாள். நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலையில் சார்ச்சில் மோதிரம் மாற்றி, மாலையில் கலியாண மண்டபத்தில் அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், தாலி மட்டும் கட்டிக் கொண்டு உஷா, திருமதி உஷா மனோவானாள்.  Read more

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன். முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார். கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை. கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது. கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது. „கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா?“ என்று சூசையிடம் கேட்டேன். கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது. „அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார். „சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள். „சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.
எங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ? Read More