நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன். முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார். கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை. கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது. கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது. „கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா?“ என்று சூசையிடம் கேட்டேன். கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது. „அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார். „சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள். „சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.
எங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ? Read More

Drucken   E-Mail

Related Articles